முன்னர் தபால் வழியில் விண்ணப்பங்களை அனுப்பி மதிப்பெண் சான்றிதழ்களை பெரும் நடைமுறை முற்றிலும் மாற்றப்பட்டு ஆன்லைன் வழியாக செயல்படுத்தப்பட்டுள்ளது . இது மிகவும் எளிமையான செயல்முறையாகும்
இ சேவை வலைதளத்தில் உள்நுழைந்து என்பதை கிளிக் செய்யவும் . அதில் என்பதை தேர்வு செய்யவும்.
இப்போது தோன்றும் திரையில் ஆவணத்தின் வகை, வகுப்பு, பதிவெண் அல்லது தேர்வெண் , தேர்ச்சி பெற்ற வருடம் , தேர்ச்சி பெற்ற மாதம் , விண்ணப்பதாரர் பெயர் , அலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி , தொடர்பு முகவரி போன்ற தகவல்களை உள்ளீடு செய்யவும் .
சமர்ப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்
காவல் நிலையத்தால் வழங்கப்பட்ட ஆவணம் தொலைந்ததற்கான புகார் பதிவு ஆவணம்
புகைப்படத்த்துடன் கூடிய முகவரி சான்று
மாற்றுச்சான்றிதழ் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாங்கிய ஒப்புதல் கடிதம்
ஆவணங்களை பதிவேற்றிய பிறகு விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 505 செலுத்த வேண்டும் .
கட்டணம் செலுத்திய பிறகு குறிப்பு எண்ணுடன் கூடிய ஒப்புதல் கடிதம் கிடைக்கும் .
குறிப்பு எண்ணை வைத்து ஆவணத்தின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளலாம் .
உங்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலானது தபால் மூலம் நீங்கள் உள்ளீடு செய்து முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்
காவல் நிலையத்தால் வழங்கப்பட்ட ஆவணம் தொலைந்ததற்கான புகார் பதிவு ஆவணம் பெறுவதற்கு என்ற வலைதளத்தில் உள்நுழையவும் .
பொதுமக்கள் சேவையில் கட்டணம் என்ற பிரிவில் தொலைந்து போன ஆவண அறிக்கை என்பதை தேர்வு செய்யவும் .
இப்போது தோன்றும் திரையில் proceed என்பதை கிளிக் செய்து உள்நுழையவும் .
இதில் விண்ணப்பதாரர் பெயர் , விண்ணப்பதாரரின் தகப்பனார் பெயர் , முகவரி, பின்கோடு , அலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை உள்ளீடு செய்யவும் .
get otp என்பதை கிளிக் செய்து கடவுச்சொல்லை பெறவும்.
கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்.
இப்போது புதிய திரை தோன்றும். இதில் ஆவணத்தின் வகை , ஆவணம் தொலைந்த நாள் , நேரம், இடம், மாவட்டம் , பள்ளியின் பெயர் , ஆவணம் தொலைந்ததிற்கான குறிப்பு போன்றவற்றை உள்ளீடு செய்யவும் .
பிறகு விண்ணப்பக்கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
உடனே புகார் அறிக்கை கிடைத்துவிடும் .